ஐந்து கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண்.! இரவில் யாருடன் இருக்க வேண்டும் என்பதை இப்படி தான் தேர்வு செய்கின்றனராம். இதோ புகைப்படங்கள்.!!
சில பெண்களுக்கு திருமணம் வெறும் கனவாக இருக்க ஒரு சில பெண்களுக்கு திருமணம் இடையில் உடைந்து போகிறது. ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு கணவர்கள். நிஜத்தில் திரெளபதி போல் வாழ்கிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது என்றால் வியப்பு தான். இன்று அவர் பற்றி பார்க்கலாம். பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து ஆண்களின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில் எதிர் காலத்தில் ஆண்கள் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை கூடி விடும் என்கின்றனர்.
ஆனால் நிலை மாறி விட்டது. இமயமலையின் தொலைதூர கிராமமான ராஜு வர்மா பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்கள் வழமை போல் ஒரு திருமணம் விரும்பினால் இரண்டு திருமணம் என எம்மை போன்றே இருக்கின்றனர். ஆனால் இங்கு வசித்து வரும் ஜாடோ என்ற பெண்ணுக்கு ஐந்து கணவர்கள் உள்ளனர். இவரது ஐந்து கணவர்களும் சகோதரர்கள்.
ஐந்து கணவர்களான சந்த் ராம், பஜ்ஜு, கோபால், குடு, தினேஷ் ஆகியோர், மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கின்றனர். இவர்களது வாழ்வில் குழப்பமே இல்லை என்கின்றனர். இரவில் இவர்கள் எப்படி உறங்குவார்கள் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்கின்றனர். ஜாடோ யாருடன் உறங்க விரும்பினாலும் நாங்கள் கட்டாய படுத்த மாட்டோம். அவள் யாருடன் எப்போது உறங்க வேண்டும் என்பதை அவளே தேர்வு செய்கிறாள்.
இருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் யாருடையது என்ற கேள்விக்கு இவர்களுக்கு நாங்கள் 5 பேரும் தந்தைகள். யார் என்று பிரித்து பார்ப்பதில்லை. இத்தனை வருடத்தில் சிறிய அளவில் கூட சண்டை வந்ததில்லை, 5 கணவர்களும் ஒற்றுமையாக மனைவியை பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இரவு உறக்கம் ஒப்பந்தப் படி இருந்தது, ஆனால் தற்போது விருப்ப படி செல்கின்றது என்கின்றனர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.!!