சிறு நீரக கற்கள் வலி இன்றி இலகுவாக கரைய வேண்டுமா.!? ஒரே ஒரு முறை இந்த ஜூஸ் குடியுங்கள் போதும்..!!
சிறு நீரக கற்கள் என்பது இன்றளவில் அதிகமானோரை பாதிக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதற்கு இன்றைய உணவு முறைகள் கூட காரணமாக இருக்கலாம். இருப்பினும் அதே உணவுகளை தான் நாம் மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதனால் வரும் முன் காப்பது என்பது இன்றளவில் தோல்வியடைந்து வருகிறது..வந்த பின் தான் நோய்களை குணமாக்க வேண்டியதாகிட்டு.
இன்று நாம் பார்க்கப் போவது சிறு நீரக கற்களை இலகுவாக அகற்றுவது எப்படி இது நிஜத்தில் உண்மையா என்பது பற்றி தான். இந்த மருத்துவம் 100% பயனளிக்கிறது. இது பலருக்கு அறுவை சிகிச்சை இன்றி சிறு நீரக கற்களை கரைப்பதற்கு உதவி உள்ளது: இந்த மருத்துவத்தை செய்வதற்கு தேவைப்படுவது வாழைத் தண்டு, பால், எலுமிச்சை சாறு, மிளகு , தண்ணீர் இவற்றை கொண்டு மருத்துவத்தை செய்யும் முறையை பார்க்கலாம்.
முதலில் வாழைத்தண்டை சிறிது சிறிதாக வெட்டி அதில் உள்ள நார்தன்மையை நீக்கி விடுங்கள். பின்பு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் சிறிதாக வெட்டிய வாழைத்தண்டை மிக்ஸி யாரில் போடுங்கள் அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக அரையுங்கள். தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் கால் கப் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றாக அரைத்த பின் வடி ஒன்றில் வடித்து அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரை கப் வாழைத்தண்டு ஜூஸுக்கு அரை கப் காய்ச்சாத பால் சேருங்கள். இதில் சுவைகேற்ப உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதனுடன் பாதி எலுமிச்சை சாற்றை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். வாழைத் தண்டு ஜூஸ் தயார்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள்..அவ்வளவு தான். சாதாரணமாக இது ஒரே நாளில் சிறு நீரக கற்களை வெளியேற்றி விடும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து இதனை காலையில் குடியுங்கள் அதன் பின் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள். கற்கள். இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடும்..!!