குளியாப்பிட்டிய பகுதியில் தொடரும் பதற்றம்..நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம்..!
நேற்று இரவு குளியாப்பிட்டிய பகுதியில் முஸ்லீம் வர்தகர்களின் கடைகள் மற்றும் பள்ளி வாசல்கள் இனம்தெரியாத குழுவொன்றினால் தகர்க்கப் பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியது. அதனால் நேற்று இரவில் இருந்து இன்று காலை 4மணிவரை ஊரடங்கு சட்டம் போடப்பட்டு பின் நீக்கப் பட்டது.
அதனை தொடர்ந்து இன்றைய தினமும் குறித்த பகுதி சற்று பதற்றமாகவே காணப்பட்டது. பொலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலை தற்போது முதல் நாளை காலை 4 மணிவரை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல, தும்மலசூரிய போன்ற பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளர் ருவண் தெரிவித்துள்ளார்.
இரவில் ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் பேரில் குறித்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது..!