ஆசையாய் காதலித்து திருமணம் செய்த இளைஞன்..! வைத்தியசாலையில் உயிருக்கு போராட வைத்த மணப்பெண்..! இது காதலா..?
காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட சம்பவம் தெலுங்கானா சூர்யபெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன் மற்றும் விஜயலட்சுமி என்ற இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் நண்பர்கள் முன் நிலையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து ஒருவாரமான நிலையில் நவீன் மீது சூரியபெட் பொலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து இருவரையும் பொலீஸ் நிலையம் வரவழைத்த பொலீஸார் விஜயலட்சுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பொலீஸார் பிரித்தால் உயிரை விடுவது என்ற எண்ணத்தில் விசத்துடன் வந்திருந்த நவீன் விஷம் முழுவதையும் குடித்த உடனேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக வைத்தியசாலையில் பொலீஸார் அனுமதித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் நவீன் சிகிச்சை பெற்று வருகிறார்.!