கற்பழித்து இரண்டு சிறுமிகளின் பிறப்புறுப்பை சேதப் படுத்தி கொலை செய்த கொடூரனை விடுதலை செய்த நீதி மன்றம்..! மக்கள் கொடுத்த தண்டனை…வைரலாகும் வீடியோ…!!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு வேண்டும் என பலரும் போராடி வரும் நிலையில் கடந்த 27ம் திகதி நான்கு வெறிபிடித்த மிருகங்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்டார். இதன் விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகளை பொலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்ட பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றவாளிகளுக்கும் தண்டனை வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் 2017ம் ஆண்டு கேரளா பாலக்காட்டில் 13 மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர்.
13 வயதான அக்கா ஜனவரி 13ம் திகதி தூக்கில் தொங்கிய் நிலையிலும் 9 வயதான தங்கை மார்ச் 4ம் திகதி சடலமாக மீட்கப் பட்டனர். குழந்தைகள் இருவரின் பிறப்புறுப்பும் கொடூரமான முறையில் சிதைக்கப் பட்டிருந்தது.குழந்தைகளின் மருத்துவ அறிக்கையில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம் கானப்பட்ட நால்வர் கைது செய்யப் பட்டு பின் அவர்களுக்கு எதிரான சாட்சிகள் போதாது என கூறி நால்வரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. மக்கள் எவ்வளவு போராட்டம் நடத்தியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் முக்கிய குற்றவாளியான மது மக்களின் கையில் மாட்டிய நிலையில் மக்கள் அவனை அடித்து துவைத்துள்ளனர். தற்போது பொலீஸார் மீட்கப் பட்ட மது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்..!!
Madhu, who was recently acquitted by a POCSO court in Palakkad for the rape and death of 2 minor Walayar sisters, was found lying on the road after a group of men thrashed him. Police later took him to a hospital. #Kerala #Palakkad #WalayarRapeCase pic.twitter.com/j28IVZ33EY
— Shilpa Nair (@NairShilpa1308) December 7, 2019