மலேசியாவில் புகைமூட்டம் அதிகரித்து வருவதால் 1.7 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு…!!!
மலேசியாவில் புகைமூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு உள்ள 2,500 பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் சுமார் 1.7 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று மலேசியக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக ஒன்பது இலட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர், பினாங்கு, புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நாளையும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று கல்வியைமச்சு கூறியுள்ளார். இதற்கு இடையே செயற்கை மழையைப் பொழிய வைக்கும் முயற்சிகளை மலேசியா இன்று தொடரவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு நிலப்பகுதிகளில் தீ எரிந்தால் அதை அணைக்கச் செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படலாம் என்று மலேசிய அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.
சுமத்ரா, கலிமந்தான் வட்டாரங்களில் காட்டுத் தீ பற்றி எரியும் பகுதிகளைக் காட்டும் துணைக் கோளப் படங்களை வெளியிடப் போவதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.