முஸ்லீகள் மீதான இன துவேசம்..!? உண்மை என்ன? ஒரு நிமிடம் படியுங்கள்..!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய நமது வாசகர்கள், மற்றும் நேயர்களுக்கு வணக்கம், உங்களுடன் சில நிமிடங்கள்.
யாருடைய கணவரை யார் வைத்திருக்கிறார். யாருடைய குழந்தைக்கு யார் அப்பா.? நடிகைக்கு அந்த இடத்தில் மச்சம், இப்படி எழுதினால் அது ஊடகம். உண்மையில் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவேனும் எழுதினால் அது விபச்சார ஊடகம். மக்களின் புரிந்துணர்வு இப்படி இருக்கிறது. புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! இலங்கையில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் சிறுபான்மை மக்களுக்காக இயங்குகிறது. அதனை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக, விஷமிகள், மத வெறியர்கள், அடிப்படைவாதிகள் வாழ்வது மிகவும் கேவலம்.
இதில் இவர்களுக்காக அவர்களுக்காக என்று ஒரு தலைப் பட்சமாக இயங்க முடியாது. அனைவரும் ஒரு விடயத்தை புரிந்துகொண்டாலே போதும் எந்த ஒரு ஊடகத்தாலும் ஆதாரமற்ற செய்திகளை பகிர முடியாது. ஆதாரம் இல்லாமல் பகிர்வதும் இல்லை. ஆனால் சில உண்மைகள் மறைக்கப் படும் அது இன்றைய அரசியல் அல்லது அரசால் கட்டுப் படுத்தப் படுகின்ற விடயம்.
ஆனால் உண்மைக்கு பதிலாக பொய்யை மக்களிடம் சேர்க்க மாட்டார்கள்.மேலோட்டமாக உண்மையை கூறிவிட்டுச் செல்வார்கள். இது தான் எம் நாட்டின் ஊடக சுதந்திரம். கடந்த சில நாட்களாக எங்களால் எதையும் எழுத முடியவில்லை, எதை எழுதினாலும் அதில் பொய் என்ற ஒன்றையும் இன துவேசம் என்ற ஒன்றையும் இலகுவாக புகுத்திச் செல்கின்றனர். மதம் என்ற சாயம், இனம் என்ற துவேஷம் கொண்டு செய்திகளை பொய்யாக்குகிறார்கள். உண்மை என்று ஆதாரமாக நிரூபித்தாலும், பொய் என்று கூட்டமாக வந்து செய்திகளை திசை திருப்புகிறார்கள்.
”உங்களால் வாழும் எம்மால் எப்படி உங்களை தாக்க முடியும்” உங்கள் மேல் காழ்ப்புணர்வு கொண்டு ஒரு பதிவினை பகிர முடியும்? உண்மையை சொல்கிறோம்..அது இனம் மொழி பற்றிய அவசியம் எமக்கு இல்லை. எம் முன் ஆதாரங்களுடன் கிடைக்கும் தகவல்களை அனைவரின் முன்னும் வைக்கிறோம். உங்கள் தலைவர்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். குற்றம் செய்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள் நீங்கள் ஏன் குதிக்கிறீர்கள்.
ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் குற்றவாளி அல்ல அவர்கள் தண்டிக்கப் படுவதை நாமும் எதிர்கிறோம். உண்மையில் என்ன நடக்கிறது ஆராய்ந்து பாருங்கள். உண்மைக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள். நாங்கள் சொல்வது பொய் என்று நீங்கள் நிரூபித்தால் நிச்சயம் அதை திருத்த தயாராக இருகின்றோம்.
ஆனால் ஆதாரங்களை பொய்யாக்க முயற்சிக்காதீர்கள். ஊடகங்கள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கலையோ கொலையே உங்கள் முன் உண்மையை எடுத்து வருவது எம் கடமை..! பேனா முனை அன்றும் இன்றும் கூர்மையானது தான். !
மதிப்பிற்குரிய சொந்தங்களே, ஊடகம் எனும் வகையில் அனைத்து வகையான செய்திகளையும் நம் மக்களுக்கு வழங்க வேண்டும். அரசியல், சம கால செய்திகள், மட்டுமன்றி , சினிமா ரசிகர்களுக்கும் செய்தி வழங்க வேண்டும். இதனை தாங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். நாம் இலவசமாக சேவை வழங்குவோர் அல்ல. இந் நிறுவனத்தை நம்பி பணியாளர்கள் உள்ளார்கள். வெறுமனே கிடைக்கின்ற அரசியல் செய்தியை மாத்திரம் பகிர்ந்தால், தனிக் கடையில் நாம் டீ ஆத்திக் கொண்டிருக்க வேண்டியது தான். இது உலகளாவிய ரீதியில் தன் சேவையை வழங்கும் இணையம். ஆதலால் அனைத்து ரசனை கொண்டவர்களையும் கவர வேண்டிய செயற்பாடு எமக்கு உண்டு.
உங்கள் அனைவரின் கோபமும் புரிகிறது. ஆனால் தொடர்ச்சியாக சிலோனில் இடம் பெறும் கொடூரங்களை பதிவிட்டால், சிலோன் வாசகர்கள் மட்டுமே படிப்பார்கள். ஏனைய வாசகர்களுக்கு செய்தி ஏது? ஆதலால் இங்கே அனைத்து வகையான விடயங்களையும் பகிர்ந்து வருகின்றோம்.
இப்போதெல்லாம் நாலு பேருக்கு நன்மை செய்தோரின் செயலைச் சொல்லும் செய்தியை படிப்போரை விட,
நடிகையின் நாய்க்கு நாலு நாள் காய்ச்சல் எனும் செய்தி படிப்போர் தான் அதிகம். இதற்காக ஊடகம் எனும் ரீதியில் நாமும் வெட்கித் தலை குனிகிறோம். உண்மைகள் ஒரு போதும் உறங்காது என்பதனை நாம் அனைவரும் நினைவில் வைத்திருப்போமாக. அனைவருக்கும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!!
புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி.
அன்புடன் புரட்சி வானொலி செய்திச் சேவையின் ஆசிரியர் பீடம்!!