“என் மகளை கொலை செய்துவிட்டார்கள்” 19 வயது மகளின் மரணத்திற்கு நீதி கேட்கும் தந்தை..!!
2017ம் ஆண்டு கேரளாவில் தேவாலயத்திற்கு சென்ற மிஷேல் என்ற கல்லூரி மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தந்தையின் இரண்டு வருட போராட்டத்திற்கு நீதி மன்றம் செவி சாய்த்துள்ளது. 2017ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி 19 வயதான மிஷேல் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
தேடி பார்த்தும் இல்லாததால் பொலீஸில் புகார் கொடுத்தனர். அடுத்த நாள் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஏரியொன்றில் பிணமாக மீட்கப் பட்டார். பொலீஸார் இதனை தற்கொலை என கூறினார்கள். ஆனால் தற்கொலைக்கான எந்த அடையாளங்கள் எதுவும் இருக்கவில்லை.
ஆனால் உடலில் நகக் கீறல்கள் முகத்தில் காயங்கள் இருந்தது, அது மட்டும் இன்றி நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்ட மிஷேலின் வயிற்றில் வெறும் 200ml தண்ணீரே இருந்தது.அத்துடன் தேவாலயத்தின் வெளியே மிஷேல் வரும் போது பைக்கில் இருவர் மிஷேலை பின் தொடர்ந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இவை எதையும் பொருட்படுத்தாமல் பொலீஸார் தற்கொலை என பைலை க்ளோஸ் செய்தார்கள். ஆனாலும் மிஷேலின் தந்தை தன் மகள் தற்கொலை செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். பொலீஸாரின் கவனக்குறைவு காரணமாக வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்ற படி ஏறினார்.
ஆனால் சிபிஐ யும் பொலீஸை போலவே தற்கொலை என்ற ரீதியில் விசாரணை செய்தார்கள். இதனால் மனமுடைந்த மிஷேலின் தந்தை தொடர்ந்தும் போராடினார் 2வருடங்கள் விடா முயற்சி செய்தார். தன் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எப உறுதியாக இருந்த அவர் தொடர்ந்தும் நீதிமன்ற படி ஏறினார். தன் பக்க நியாயங்களை நீதிமன்றில் தெளிவு படுத்தினார்.
நீதிமன்றம் மிஷேலின் தந்தைக்கு உதவ இரண்டு வருடங்களின் பின் முன் வந்துள்ளது. குறித்த வழக்கு மீண்டும் தூசி தட்டப் பட்டுள்ளது. தற்போது கொலை என்ற ரீதியில் வழக்கு விசாரிக்கப் படுவதோடு மிஷேலை பின் தொடர்ந்த இருவரின் புகைப்படமும் வெளியிட்டு மக்களிடம் உதவி கோரியுள்ளனர்..!!