தந்தையே மகளை கர்ப்பமாக்கியதாக கூறி கணவரை பழி வாங்கிய மனைவி. ! சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!
மகளை கற்பழித்து கருகலைப்பு செய்ததாக கணவரின் மீது புகார் செய்த மனைவியை பொலீஸார் கைது செய்த சம்பவம் ஒன்று சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பாபு என்பவருக்கும் கலா என்ற பெண்ணுக்கும் 2003 ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தாயாரான கலா மாடர்ன் வாழ்க்கையை விரும்பியுள்ளார்.
குழந்தைகளை கவனிக்காத இவரது செயலை கணவர் கண்டித்ததால் கணவரை பிரிந்து செல்ல முடிவெடுத்த கலா தனது 11 வயது மற்றும் 1 1/2 வயது மகளை கணவருடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார். குழந்தைகள் இருவரையும் பாபு வளர்ந்து வந்த நிலையில் கலா பொலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் கணவர் என் 11 வயது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதால் அவள் கர்ப்பமடைந்து விட்டாள்,
அதன் பின் நான் குழந்தைக்கு மருந்து கொடுத்து கருவை கலைத்தேன், இது தொடர்பாக எனக்கும் கணவருக்கும் சண்டை வந்ததால் தான் நான் அவரை பிரிந்தேன். இப்போதும் என் கணவர் மகளை தகாத உறவில் வைத்திருக்கிறார் என கூறி பரபரப்பு புகார் கொடுக்க பொலீஸார் பாபுவின் மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது முற்றிலும் பொய்யான புகார் என பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதன் போது சிறுமிக்கு எந்த ஒரு பாலியல் துஷ்பிரயோகமும் இடம்பெறவில்லை என உறுதியானது. அத்துடன் குறித்த சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
அதில் தாய் பலமுறை தங்களை கட்டாய படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்ததாகவும் ஆனால் தாங்கள் அதனை விரும்பவில்லை என்பதால் தந்தை மீது பொய் புகார் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை ஆராய்ந்த சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த தாய் குழந்தைகளுக்கு ஒரு தவறான உதாரணம்.
பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் கணவரை பழிவாங்க செய்த செயல் கொடூரமானது. போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இப்படியான பெண் பூமியில் வாழ்வது வேதனை அழிக்கிறது என கூறியுள்ளதுடன் கலா மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் குழந்தைகளுக்கு தந்தையே பாதுகாப்பு என கூறியுள்ளார். !!