நள்ளிரவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; குறிவைக்கப்பட்ட குடும்பஸ்தர் சாவு!
மொனராகலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மொனராகலை, தணமல்வில குமாரகம பகுதியிலேயே இச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார் எனத் தெரியவருகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் சடலம் இன்று அதிகாலையே மீட்கப்பட்டது என தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.