மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேநீர் கடைக்கு சென்று அவரே தன் கையால் தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கினார்..!! இதோ வைரலாகும் வீடியோ..!!
இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கிழக்கு மிட்னாபூர் பகுதியில் சென்று அங்குள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடினார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தத்தபூர் கிராமத்திற்கு சென்ற அவர் குழந்தைகளுக்கு இனிப்புகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். பின்னர் மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உட்பட பலரது வாழ்வு குறித்தும் தெரிந்து கொண்டார். அந்த பகுதியில் இருந்த மக்களுடன் அவர் செல்போனில் படம் எடுத்து சந்தோசம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தேநீர் அருந்துவதற்காக தேநீர் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.அங்கு அவருடன் கட்சி தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, போக்குவரத்து மந்திரி சுபந்து அதிகாரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் சென்றார்கள். குறித்த தேநீர் கடைக்காரரிடம் அனுமதி பெற்று கொண்டு அவரே தன் கையால் தேநீர் தயாரித்து, சுற்றியிருந்தவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தன் கையால் தேநீர் தயாரிக்கும் போது எடுத்த விடியோவை மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற சின்ன சின்ன விடயங்கள் நமது வாழ்வில் சந்தோசத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
Sometimes the little joys in life can make us happy. Making and sharing some nice tea (cha/chai) is one of them. Today, in Duttapur, Digha | কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুরে। #Bangla pic.twitter.com/cC1Bo0GuYy
— Mamata Banerjee (@MamataOfficial) 21 August 2019
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.