மின்சாரம் தாக்கி மாமி மற்றும் மருமகள் உயிரிழப்பு..!! அதிர்ச்சியில் கணவர்…!!!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சின்னையா ஆசாரி மற்றும்அவரது மனைவி 58 வயதுடைய தெய்வானை ஆகிய இருவரும் மகன் லட்சுமணன், மருமகள் 25 வயதுடைய சரண்யா, பேரன் 2 வயதுடைய கார்த்திக், எட்டு மாத குழந்தை பூஜா ஆகியோருடன் வசித்து வந்தார்.லட்சுமணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை இவர்களின் வீட்டின் முன்பாக மின்சார கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்தது. அதனை அவதானிக்காமல் தெய்வானை அதன் மீது கால் வைத்துடான் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கவனித்த அவரது மருமகள் சரண்யா உடனடியாக தனது மாமியாரை காப்பாற்ற முயன்று அவரை பிடித்தார். அந்த வேளையில் சரண்யாவின் இடுப்பில் 8 மாத குழந்தை பூஜாவும், கையில் மகன் கார்த்திக்கும் இருந்துள்ளனர்.
மாமியாரை காப்பாற்ற சென்ற சரண்யா மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதை அவதானித்த சரண்யா இடுப்பில் இருந்த தனது குழந்தையை தூக்கி இருந்ததோடு, அவரது கையை பிடித்திருந்த மகனையும் தள்ளி விட்டார்.
இதை தொடர்ந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாமியும், மருமகளும் உயிரிழந்துள்ளனர்.
சரண்யா உயிர் போகும் நிலையிலும் கூட தனது சாமர்த்தியமான செயல்பாட்டால் தனது குழந்தைகளை உயிரை காப்பாற்றிய சரண்யாவின் செயலை அந்த பகுதியிலுள்ள மக்கள் மிகவும் சோகத்துடன் பகிர்ந்து வந்துள்ளனர்..
சரண்யாவின் கணவர் லட்சுமணன் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் ஊருக்கு வந்து தனது குடும்பத்தை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி அங்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.