28 வருடங்களின் பின் சிறையில் இருந்து மகளின் திருமணத்திற்காக பட்டு சாரியில் வெளியே வந்த நளினி…!!
இலங்கைக்கு அமைதிபடை என அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் அனுப்பப் பட்ட இந்தியபடையினர் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத விடுதலை புலிகள் படையினரை திரும்ப பெறும்படி போராட்டங்கள் நடத்தினார்கள் ஆனால் அன்று சிங்கள அரசுக்கு உதவிய இந்திய இராணுவமோ பிரதமர் ராஜீவ் காந்தியோ அதனை கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஏற்பட்ட விபரீதமாக ராஜீவ் காந்தி சுட்டுக் கொள்ளப்பட்டார். இந்த கொலையில் சந்தேக நபர்களாக முருகன் உட்பட 7 பேர் கைதுசெய்யப் பட்டனர். இதில் முருகனின் மனைவியான நளினியும் அடங்கும். கைது செய்யப் படும்போது நளினி கர்ப்பமாக இருந்தார். நளினி முருகன் தம்பதினருக்கு சிறையில் ஹரித்தா என்கிற பெண் குழந்தை கிடைத்தது.
குழந்தை லண்டனில் வாழும் உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்தது, 28 வருடங்களாக சிறையில் வாழும் நளினி மற்றும் முருகன் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என 6 மாதகால பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் நளினிக்கு ஒரு மாத கால பரோல் வழக்க அனுமதியளித்தனர்.
12 நிபந்தனைகளுடன் 1 மாதகால பரோல் வழங்கப் பட்டுள்ளது. சதுவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்,மீடியாக்களுக்கு பேட்டியளிக்க கூடாது , அத்துடன் 1 மாத காலத்திற்குள் மகளின் திருமணத்தை நடாத்திவிட்டு வேலூர் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் நிபந்தனைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த உறவினர்கள் சில மண மகன்களை பார்த்துள்ளதாகவும் ஒருவரை நளினி தேர்வு செய்ததும் திருமண ஏற்பாடுகள் இடம்பெறும் எனவும் கூறியுள்ளனர். மாப்பிள்ளை எங்கு உள்ளவர் என்ற கேள்விக்கு ஹரித்தா இலங்கை இளைஞரே வேண்டும் என்கிறார். அதனால் நிச்சயம் ஈழத்தமிழர் தான் என்கின்றனர். தற்போது வந்த செய்திப் படி புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞர் தான் மணமகனாம்..!!