இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் மூன்று மகன்களும் தங்கள் காதலிகளுடன். வைரலாகும் புகைப்படங்கள்..!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராசபக்ச அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு தலைவராகவும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரியாகவும் இருக்கிறார். சிறுபான்மை இன மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என அவர் பல விடயங்களை செய்தாலும் இறுதி யுத்தத்தை மறந்து என்றுமே மக்களால் வெளியே வர முடியாது.
இது எப்படி போனாலும் நல்லாட்சி அரசு பதவியேற்று சில நாட்களில் அவரது மனைவி சிரோமி ராஜபக்ச,மீது புகார்கள் சுமத்தப் பட்டு விசாரணைகள் இடம்பெற்றது அவை அனைத்தும் சிறிது காலத்தில் மறந்து போனது. இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் மகன்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகி வருகிறது. மகிந்த அவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
நாமல், ஹோசித, யோசித, மூத்த மகன் நாமல் ராஜபக்ச ஏற்கனவே இந்திய நடிகைகள் சிலருடன் கிசுகிசுக்கப் பட்டார் பின்பு இலங்கை நடிகை ஒருவருடன் ஊர் சுற்றினார். பின் அரசியலில் இறங்கி முழு நேர அரசியல் வாதியாக மாறினார். இவரது தம்பிகள் இருவரும் தற்போது திருமணம் செய்துவிட்டனர். சரி இவர்களது குடும்பம் முன்னாள் ஜனாதிபதி குடும்பம் ஆகிட்டே அதனால் இலங்கையில் மிகப் பெரிய தொழிலதிபர்கள் இருவரின் மகள்களை தான் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.
இந்த நிலையில் நாமலின் காதலி தொடர்பிலும் செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது. தம்பிகளுக்கு டாப் கொடுக்கும் வகையில் இலங்கையில் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான ஒருவரின் மகளை திருமணம் செய்யப் போகிறாராம்.. இதோ அண்ணா மற்றும் தம்பியர் தங்கள் காதலிகளுடன்.!!