இலங்கையில் நடந்த வன்முறையில் தங்கள் உயிரை பணயம் வைத்து முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றிய சிங்கள குடும்பம்..!பதைபதைக்க வைத்த நிமிடங்கள்..!
இலங்கையில் இடம்பெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை வெடித்தது. நீர்கொழும்பு, குருனாகலை, புத்தளம், கம்பஹா, போன்ற இடங்களில் முஸ்லீம்களின் சொத்துக்கள் அடித்து நொருக்கப் பட்டதுடன் பள்ளி வாசல்கள் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டது.
வீட்டில் இருந்த முஸ்லீம்களை அடித்து வெட்டி ஏகப்பட்ட கொடுமைகளை சில மதவாதிகள் செய்தனர். இதில் தங்கள் உயிரை பற்றி சிந்திக்காது இரண்டு முஸ்லீம் குடும்பங்களை ஒரு சிங்கள குடும்பம் காப்பாற்றி உள்ளது. நாத்தாண்டிய பகுதியில் காடையர்கள் முஸ்லீம் வீடுகளை குறிவைத்து தாக்க தொடங்கினார்கள்.
என ஆரம்பித்து அன்று நடந்த பயங்கரத்தை விவரித்தார் சிங்கள சகோதரி சுஜிவன்வி. ஹலீமா உட்பட நால்வர் மற்றும் முஹமட் ரிஸ்வியின் குடும்பத்தில் 14 பேர்.
எங்கள் வீடு சிங்களம் என்பதால் தாக்க மாட்டார்கள் அதனால் நாங்கள் ஹலீமாவின் வீட்டிற்கு சென்றோம். நானும் குமாரவும் இந்த முடிவை எடுத்தோம்.
உயிர் ஆபத்து வரும் என தெரியும் இருப்பினும் அப்பாவிகள் கொல்லப் படுவதை ஏற்க முடியாது. அதனால் ரிஸ்வி மற்றும் 14 பேரையும் ஒரு அறையில் அடைத்தோம்.
வீட்டில் நானும் குமாரவும் இருந்தோம் வீட்டை உடைக்க முயலும் போது குமார கத்தினார் நாங்கள் சிங்களம் ஏன் எங்கள் வீட்டை உடைக்கிறீர்கள் என
எங்களை பார்த்ததும் வீட்டையோ எங்களையோ தாக்கவில்லை. ஆனால் வீட்டிற்குள் வந்திருந்தால் நிச்சயம் அனைவரும் தாக்கப் பட்டிருப்போம் இருப்பினும் குமார துணிவுடன் இருந்தார் அதனால் எம்முடன் இருந்தவர்களை காப்பாற்றிவிட்டோம் என்கிறார் பெறுமையுடன்.
இது பற்றி ரிஸ்வி மற்றும் ஹலீமா கூறுகையில் சுஜிவம்வி மற்றும் குமார இல்லாவிட்டால் நாங்கள் என்ன ஆகி இருப்போம் என தெரியவில்லை. இவர்களுக்கு நன்றி என்ற வார்த்தை போதாது என்கிறார்.!