நேற்றைய தினம் கலவரம் இடம்பெற்ற நீர்கொழும்பு பலகத்துறையின் தற்போதைய நிலை..!
நேற்றைய தினம் நீர்கொழும்பு பலகத்துறை பகுதியில் முஸ்லீம் இளைஞர்கள் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை கலவரமாக வெடித்தது. இதனால் பலகத்துறை பகுதியில் முஸ்லீகளின் வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டதுடன் பலரது வீடுகளும் அடித்து உடைக்கப் பட்டது.
இதனால் சிலர் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விஷேட அதிரடி படையினர் குவிக்கப் பட்டனர். இது கத்தோலிக்க முஸ்லீம் கலவரம் என பலர் நினைத்திருக்க பெளத்த முஸ்லீம் கலவரமாக மாறி இருந்தது. இது தொடர்பாக கலவரத்தில் இறங்க வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.
இதன் பேரில் கிருஸ்தவ இளைஞர்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தாது இருந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்தி மத வெறியவர்கள் தாக்குதலில் ஈடுபடுபட்டனர். இதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்த படையினர் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் போட்டப் பட்டது.
காலை நீக்கப் பட்டது. தற்போது மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். நீர்கொழும்பு பலகத்துறை பகுதியும் அமைதியான நிலையில் இருகிறது. பாடசாலைகள் அலுவலகங்கள் வழமை போல் உள்ளது. இருப்பினும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!