காதலியை வெட்டி சாப்பிட்ட நபரால் லண்டனில் பரபரப்பு..!!
தனது காதலியை கொலை செய்து சாப்பிட்ட நபர் ஒருவரால் லண்டனில் உள்ள குடியிருப்பொன்றில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரித்தானியாவை சேர்ந்த Paul DUrant என்பவரை பொலீஸார் தேடி வந்த நிலையில் அவர் ஸ்பெயினில் தலைமறைவானார்.
அங்கு Paulக்கு அறிமுகமானவர் தான் Karen durrall. 41 வயதான இவர் Paul தன் மீது காட்டிய அன்பினால் ஈர்க்கப் பட்டு காதலிக்க ஆரம்பித்தனர். கொள்ளைகாரனான Paul மற்றும் Karen ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் Paul இருக்கும் இடத்தை அறிந்த பொலீஸார் அவனை தேடி வீட்டிற்கு சென்ற போது அதிர்ந்தனர். அவனது வீடு முழுவதும் இரத்தக் கறையும் துர்நாற்றமும் வீசியது.
அறையில் கத்தி ஒன்றும் சதை துண்டுகளும் இருந்தது. இது தொடர்பாக Paul இடம் விசாரணை செய்த போது தனது காதலியை வெட்டி சாப்பிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து , அவரை கைது செய்த பொலீஸார் சிறையில் அடைத்தனர்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே வந்த Paul லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் பயத்தில் உறைந்துள்ளனர். நர மாமிசம் சாப்பிடும் நபர் தங்கள் குடியிருப்பில் இருந்தால் ஆபத்து நேரிடும் என பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.