அமெரிக்கா – ஈரான் போர் இலங்கையையும் தாக்கியது!
அமெரிக்கா – ஈரானிடையே நிலவியுள்ள போர்ப் பதற்றத்தின் தாக்கம் இலங்கையையும் தாக்கியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை இன்று நடத்தியது.
இதன் எதிரொலியாக இன்று இரவு முதல் இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது.
இன்று (08) மதியம் முதல் இரவு வரை எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பாவனையாளர்கள் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன், சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருட்கள் தீர்ந்துவிட்டன என்று அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.