163 இளைஞர்களுடன் ஒரு பெண் போதையில் செய்த செயல்..! பொள்ளாச்சியில் தொடரும் கொடுமைகள்..!
நாடும் நாட்டு இளைஞர்களும் எங்கு சென்று கொண்டிருகின்றார்கள் என்று தெரியாத நிலையில் தான் தற்போது இருகின்றது. நேற்றைய தினம் பொள்ளாச்சி அருகில் சேத்துமடை பகுதியில் நடந்த விடயம் அதனை உறுதிபடுதுவது போல் உள்ளது. சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் சொகுசு விடுதியொன்றில் ஒரு பெண் உட்பட 163 இளைஞர்கள் பல விதமான போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு போட்ட கும்மாளத்தால் குறித்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கணேஷ் என்ற நபருக்கு சொந்தமான இடத்தில் ” அக்ரி நெஸ்ட்” என்ற சொகுதி விடுதியிலேயே இளசுகளின் இந்த ரகளை நடந்துள்ளது. நேற்று நள்ளிரவு பாடல் நடனம் என கிராமத்தை அதிர வைத்த இளைஞர்களின் செயலால் அதிர்ந்துபோன மக்களுக்கு அங்கு சொகுசு விடுதி ஒன்று இருந்தது கூட தெரியாதாம். கிராம மக்களின் புகாரில் பேரின் குறித்த இடத்திற்கு வந்த பொலீஸார் அதிர்ந்துள்ளனர்.
163 பேருமே உச்சக் கட்ட போதையில் இருந்துள்ளனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்ட போதை பொருட்களை உட்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோவை எஸ் பி சுஜித்குமாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி அனைவரையும் கைது செய்ததுடன் விசாரணையும் இடம்பெற்று வருகிறது. குறித்த சொகுசு விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப் பட்டுள்ளார்.
இதில் 123 பேர் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதி எனவும் மற்றைய 40 பேர் தமிழக இளைஞர் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அனைவரையும் அதிர வைத்த விடயம் எனில் இத்தனை இளைஞர்களுடன் ஒரு பெண் இருந்தது தான்.!