போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 160 பேர் கைது..!!
சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 13 வயதுடைய சிறுவன் உட்பட சுமார் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளோக் 454 ஃபாஜார் ரோட்டில் நடந்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் சந்தேக நபரான ஒரு பெண்ணும் அவரது 13 வயதுடைய சகோதரன் மற்றும் அவரது தாயும் இதன் போது கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கதவுகளைத் திறக்கக் கூறியும் அவர்கள் திறக்க மறுத்துள்ளனர். வீட்டில் இருந்த இருவர் சன்னல் வழியாகத் தப்பிக்க முயன்றனர். 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 7 இளைஞர்கள் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள 16 வயது பெண்ணுக்கும் அவரின் தம்பி, தாயாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. போதைப்பொருள் அடங்கிய பொட்டலம், போதைப் பொருளைப் புழங்கத் தேவைப்படும் பொருள்கள் போன்றவை புளோக்கின் அடித்தளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
இந்த மதம் 2 ஆம் திகதி தொடங்கி 13 ஆம் திகதி முடிவடைந்த 11 நாள் திடீர்ச் சோதனைகள், புவாங்கோக், கேலாங், ஜூரோங், செம்பவாங், சிராங்கூன், சீமேய், தெலுக் பிளாங்கா, தோ பாயோ, யீஷுன், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. சந்தேக நபர்கள் தொடர்பிலான அனைத்துப் போதைப்பொருள் நடவடிக்கைகளையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருகின்றனர்.