55 மணி நேரம் கடந்து விட்ட நிலையில் குழந்தை பற்றி தற்போது வெளியாகி உள்ள கவலையான செய்தி..! பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே..!!
சுமார் 55 மணி நேரத்தை கடந்து குழந்தை சுஜித்தை மீட்கும் பணி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது புதிய ரிக் இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுரங்கத்திற்குள் சென்று குழந்தையை மீட்க மீட்பு படை வீரர்களான திலீப்குமார் மற்றும் ராம் குமார் இருவரும் தயார் நிலையில் உள்ளனர்.
ஏராளமான தடங்கலுக்கு மத்தியில் தற்போது குழி தோண்டும் பணி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள். வருகை தந்துள்ளதுடன் மீட்பு பணி குறித்து கலந்துரையாடி வருகிறார். இன்று நண்பகல் அமைச்சர் திருமாவளவன் வந்து சென்றதுடன் சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதலும் கூறிச் சென்றார்.
இந்த நிலையில் தற்போது குழந்தையின் நிலை பற்றிய சில தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குழந்தையின் கையில் இருந்த சூடு தற்போது இல்லை என்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 மணி நேரத்திற்கு அதிகமாக கை மட்டும் வெளியே தெரிகிறது, ஆனால் எந்த ஒரு அசைவும் இல்லை.
இது வரை 7 குழுக்கள், 6 மீட்பு முயற்சி தோல்வி, வரும் வழியில் ரிக் இயந்திரம் பழுது, அதன் பின் குழி தோண்டும் போது பழுது, மழை, புதிய ரிக் இயந்திரம் அதிக சூடு, இப்படி அனைத்துமே தடங்கல், இருப்பினும் இருக்கிறது சிறு நம்பிக்கை என்கின்றனர் மருத்துவர்கள் , ஆனால் உடலில் வெப்பம் இல்லை என்பது கவலை.. இறுதி நேரத்தில் மேஜிக் நடக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை..!