ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!!
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம், கோப்பாய் போன்ற பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதியை கொலை செய்ய சதி முயற்சி மாற்றும் ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களை தொடர்ந்து அவரது பாதுகாப்புக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் செயலும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பருத்தித்துறை, தீவகம் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களுக்கு சென்று பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொள்வார். இந்த நிலையில் ஜனாதிபதி செல்லும் இடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச – தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை பொலிஸார் அவசர அவசரமாகத் திரட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி வருகையை தொடர்ந்து குறித்த இடங்களிலுள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நேற்று மற்றும் மேற்று முன்தினம் பொலிஸார், குடும்ப விவரங்களைச் சேகரித்தாக தெரிவித்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.