“குழந்தை பிறக்காது , குடும்பத்தினர் தட்டி கேட்க மாட்டார்கள் “திருநங்கைகளை டார்கெட் செய்து இளைஞர் செய்து வந்த மோசமான செயல்..!! துடிதுடித்து மரணிக்கும் திருநங்கைகள்..!!
அப்பாவி திரு நங்கைகளுக்கு காதல் ஆசை காட்டி தனது ஆசைகளை நிறைவேற்றி வந்த நபர் ஒருவர் பற்றிய செய்தி அதிர வைத்துள்ளது. சென்னை சேர்ந்தவர் முகமது உசேன். இவர் சென்னையில் பணிபுரிந்து வந்த திருநங்கையான பிரியங்காவை காதலித்து காதலித்து வந்துள்ளார். தான் கப்பலில் பணி புரிவதாக கூறியுள்ள முகமது உசேன் பிரியங்காவுடன் அதிக அன்பாகவும் நெருக்கமாகவும் இருந்துள்ளார்.
இதனால் உசேனை முழுமையாக நம்பிய பிரியங்கா தனது டெபிட் கார்ட் உட்பட அனைத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். இதனால் குஷியான உசேன் பிரியங்காவின் பணம் முழுவதையும் 5 ஆயிரம் 10 ஆயிரம் என சுருட்டி இரண்டு லட்சத்திற்கு மேல் எடுத்துள்ளார். பணம் பற்றி கேட்டதால் பிரியங்காவிடம் இருந்து சண்டை போட்டு பிரிவது போல் கழட்டி விட்டுள்ளார் உசேன்.
உசேனின் உண்மை முகம் தெரிந்த பிரியங்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சி எஸ் ஆர் பதிவு செய்து பொலீஸார் விசாரணை செய்து வந்தனர், உசேனை தேடி வந்த சென்னை பொலீஸார் தேடி வந்த நிலையில் பிரியங்காவை போல் இன்னுமொரு திருநங்கையை ஏமாற்றியது தெரிய வந்தது. தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை யுவஸ்ரீ கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
காதல் தோல்வி மற்றும் கடன் தொல்லையே இதற்கு காரணமாக இருந்தது. இந்த தகவலும் யுவஸ்ரீயை காதலித்து ஏமாற்றியது யார் என்பதும் தமிழக திருநங்கைகள் வாட்சாப் குரூபில் வைரலானது. இதனை பார்த்த பிரியங்கா அதிர்ந்து போனதுடன் பொலீஸாருக்கு அறிவித்துள்ளார். பிரியங்காவை ஏமாற்றிய உசேனே யுவஸ்ரீயையும் ஏமாற்றியது தெரியவந்தது.
உடனடியாக தூத்துக்குடி சென்ற பொலீஸார் உசேனை கைது செய்து விசாரணை செய்ததில் பிரியங்கா யுவஸ்ரீ மட்டும் இன்றி பல திருநங்கைகளை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. அன்பாக பழகும் உசேன் முடிந்த அளவு அவர்களிடம் பணத்தை எடுத்ததுடன் இன்னுமொருவரை பார்க்க சென்று விடுகிறார்.
பணத்தை கடன் வாங்கி கொடுக்கும் திருநங்கைகள் கடனால் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். இது பற்றி கூறியுள்ள உசேன், குழந்தை உருவாகும் என்ற பயம் இல்லை, சண்டை போட குடும்பம் இல்லை அதனால் தான் இவர்களை தேர்வு செய்தேன் என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!