பணத்திற்காக பெண் பொலீஸ் அதிகாரி செய்த கேவலமான செயல்.! வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட இரண்டு அப்பாவி யுவதிகள்..,!
பெண்களை வன்கொடுமை செய்த நபரிடம் இருந்து பணம் பெற்ற குற்றச் சாட்டின் பேரில் குஜராத்தின் அகமதாபாத் மஹிலா காவல் நிலைய பொறுப்பாளர் ஸ்வேதா ஜடேஜா கைது செய்யப் பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராதின் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் இரண்டு இளம் யுவதிகளை வன்கொடுமை செய்த நிலையில் அவர்கள் இருவரும் ஸ்வேதாவிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவரை சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
குறித்த நபர் 3நாட்களிலேயே ஜாமினில் வெளியே சென்றார். இந்த நிலையில் ஸ்வேதா குற்றவாளியின் சகோதரியிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்தது. பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத ஸ்வேதா சாதாரண வழக்கில் கைது செய்ய ஷா வின் சகோதரி ஸ்வேதாவிற்கு 35 லட்சம் தருவதாக கூறிய நிலையில் 25 லட்சம் மட்டுமே கொடுத்ததால் ஷாவின் குடும்பத்தை ஸ்வேதா மிரட்டியுள்ளார்.
இதனால் இந்த விஷயம் வெளியே கசிந்தது. இந்த நிலையில் ஸ்வேதாவை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து பொலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார். அத்துடன் ஸ்வேதாவில் இடை விசாரிக்கப் பட்டு வந்த பெண்கள் வன்கொடுமை வழக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது..!!