புலஸ்தினி என்கிற தமிழ் பெண் எப்படி சாரா என்கிற தீவிரவாதியானார்.? எப்படி மதம் மாற்றப் பட்டார்..? தாயாரின் கண்ணீர் பேட்டி..வீடியோ இணைப்பு..!
ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கை மக்களில் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஈஸ்டர் கொண்டாடத்தில் இருந்த 250 திற்கு மேற்பட்ட உயிர்கள் கொடூரமா கொன்று குவித்தது தீவிர வாதம். யுத்தத்தில் பாதி உறவுகளை இழந்து மீதி உறவுகளோடு மகிழ்ச்சியாக வாழ முடியும் என நினைத்து இறை பிராத்தனையில் இருந்த போது கண் இமைக்கும் நொடியில் தற்கொலை குண்டுகள் காவு கொண்டது உயிர்களை.
இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் ஐ எஸ் முழுமையாக பொறுப்பேற்றது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டது “தேசிய தெளஹீத் ஜமாத்” இதன் உறுப்பினர்களே இந்த கொடூர தாக்குதலை நடத்தினார்கள் என்பது நிரூபனமானது. இதில் அனைத்து பெயர்களும் முஸ்லீம் பெயர்களுடன் இருக்க ஒருவரது பெயர் மட்டும் புலஸ்தினி மகேந்திரன் என்கிறா சாரா என இருந்தது.
யார் இந்த தமிழ் பெண் என ஐ பி சி ஊடகம் அவரது தாயாரை காண சென்று பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளது. புலஸ்தினி மகேந்திரன் இலங்கையில் மிக முக்கியமான பள்ளி பரீச்சையாக பார்க்கப் படும் O/L லில் 9 பாடங்களில் 8 பாடத்திற்கு ஏ சித்தியும் ஒரு பாடத்திற்கு பி சித்தியும் எடுத்து உயர்தரம் மருத்துவ கல்வியை படிக்க முடிவு செய்துள்ளார். அதன் பின் காதல் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது?
தீவிர வாதிகளுடன் சேர்ந்து ஒரு அப்பாவி எப்படி தீவிரவாதியானால்.? அனைத்திற்கும் விடை கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. புலஸ்தினி என்கிற சாரா கல்முனை குண்டு வெடிப்பில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்ற நிலையில் இவரது தாயார் தன் மகள் காணாமல் போய் இருக்கிறார் என கூறும் நொடி ஏனோ மன வலியை ஏற்படுத்துகின்றது..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!