அர்ஜபஜானில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
அர்ஜபஜானில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அர்ஜபஜானில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவிகள் மூவர் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் மூவரும் பலியாகினர்.
இந்நிலையில், குறித்த மாணவிகளின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்ச எடுத்திருந்தது.
அதன்படி, நேற்றுக் காலை கட்டார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில் மூன்று சடங்களும் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனைத்துச் செயலவுகளையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.