என் அம்மா தான் என் கணவரின் மனைவி.! பொலீசாரை அதிர வைத்துள்ள இரண்டு குழந்தைகளின் தாய்..!!
இரண்டு குழந்தைகளில் தாய் ஒருவரின் கள்ளக் காதல் விவகாரத்தால் பொலீஸார் அதிர்ந்துபோன சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கன்னியாகுமரி முளகுமூட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் 10 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப வறுமையை சமாளிப்பது கடினமாக இருந்துள்ளது. சமையல் வேலை செய்து வந்த ரமேஷ் வேலைக்காக 2017ம் ஆண்டு வெளிநாடு சென்றார். மாத மாதம் மனைவி குழந்தைகளுக்கு பணம் அனுப்பி வந்த ரமேஷ் திடீரென வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டப் பட்டுள்ள நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.
ப்ரீத்தி வெளியே சென்றுவிட்டு மாலை தான் வீடு திரும்பியுள்ளார். இது பற்றி ரமேஷ் கேட்டபோது கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ப்ரீத்தி இளைஞர் ஒருவருடன் இருந்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பொலீஸார் சமாதான படுத்தியும் கணவர் மற்றும் குழந்தைகள் வேண்டாம் என ப்ரீத்தி பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் ப்ரீத்திக்கு கள்ள காதலனுடன் சர்ச்சில் திருமணமான விடயம் ரமேஷுக்கு தெரியவர மாவட்ட எஸ் பியிடம் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். விவாகரத்து பெறாத நிலையில் இன்னொமொரு திருமணம் செய்தது சட்டப் படி தவறு என ரமேஷ் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ப்ரீத்தியிடம் விசாரணை நடந்திய பொலீஸார் அதிர்ந்து போய் உள்ளனர். இதற்கான காரணம் இது தான்.
என் கணவர் திருமணம் செய்தது என்னை அல்ல என் அம்மாவை தான். ரமேஷ் நான் திருமணம் செய்யும் போது எனக்கு 15 வயது. அதனால் சட்டப் படி திருமணம் செய்ய முடியாது.. இதனால் எனது திருமண பதிவில் எனது தாயாரின் பெயரையே பயன் படுத்ததினார்கள். திருமண பதிவின் போது எனது பெயர் சிந்து என கூறி எனத் தாயின் பிறப்பு சான்றிதழை இணைத்தார்கள்.
இவை அனைத்தும் பணம் கொடுத்து செய்யப் பட்டது. திருமண சான்றிதழில் எனது அம்மாவின் பெயரும் கணவரின் பெயருமே உள்ளது. அப்படியானால் அவர் திருமணம் செய்தது என் தாயை தான் என்னையல்ல. அதனால் அவர் என் தாயின் கணவர். நான் தற்போது செய்துள்ள திருமணம் சட்டப் படியானது. இதனை நான் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்கிறேன் என பொலீஸாரின் வாயை அடைத்துள்ளார்..!!