“நான் தெரியாமல் செய்துவிட்டேன், மன்னித்து விடுங்கள்” கண்ணீருடன் முதலாளியிடம் கெஞ்சிய நாய்..! மனிதனை மிஞ்சிய பாசப் போராட்டம்..!!
தென்னாபிரிக்காவில் தெரியாமல் வைர மோதிரத்தை விழுங்கிவிட்டு பின் தன்னிடம் மன்னிப்பு கேட்ட நாய் தொடர்பான செய்திகளை நாயின் உரிமையாளர் ரிச்சார்ட் என்பவர் பகிர்ந்துள்ளார். கழட்டி வைத்த தனது வைர மோதிரத்தை காணாமல் ஒரு நாள் முழுவதும் தேடிய ரிச்சர்ட் மோதிரம் இல்லாததால் சோர்ந்து போய் உள்ளார்.
தாயினால் பரிசளிக்கப் பட்ட மோதிரம் என்பதால் ரிச்சர்ட் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவரது நாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட வைத்தியசாலை செடுத்துச் சொல்லப் பட்டுள்ளது. அங்கு நாயை ஸ்கேன் செய்த போது மோதிரம் நாயின் உடலில் உள்ளது கண்டறியப் பட
நாய்க்கு வாந்தி மருந்து கொடுத்து வாந்தியின் மூலம் மோதிரத்தை வெளியே எடுத்துள்ளனர். பின் வீட்டிற்கு வந்த போது ரிச்சர்ட்டின் நாய் சோகமாக இருந்துள்ளது. ரிச்சார்ட்டை காணும் போதெல்லாம் என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன் என கூறும் ரீதியில் நடந்து கொண்டுள்ளது.
இதனை அவதானித்த ரிச்சார்ட் நான் உன்னை மன்னித்து விட்டேன் என அணைத்துக் கொண்ட போது அதன் விழிகளில் கண்ணீர் வழிந்துள்ளது. மனிதர்களை விட நாய்கள் நன்றி உள்ளவை தான்..!!