18 வயது பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்து உயிருடன் தீ வைத்த இளைஞன்..! பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து இந்தியாவில் மற்றுமோர் கொடூரம்..!!
பிரியங்கா ரெட்டி, உன்னாவ், ஆகியோரை தொடர்ந்து இன்னுமொரு கொடூர கற்பழிப்பு கொலை சம்பவம் நேற்றைய தினம் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரீஷா ( பெயர் மாற்றம்) என்ற 18 வயதான பெண் ஒருவர் ஜித் என்ற 22 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலில் அத்துமீறுவதற்கு பலமுறை முயற்சி செய்த போதும் குறித்த பெண் இடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் தனிமையில் இருந்து பேசிக்கொண்டிருந்த போது உறவினர்கள் கண்டு பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர்.
அதன் பின் இரு வீட்டாரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததுடன் நிச்சயதார்த்தமும் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் காதலியை பார்க்க வீட்டிற்கு குறித்த இளைஞர் சென்றுள்ளார். பெண்ணின் பெற்றோர் கோயிலுக்கு சென்றுள்ள நிலையில் ரீஷா தனிமையில் இருந்துள்ளார்.
ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அயலவர்களும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் சென்ற இளைஞன் பெண்ணுடன் தகாத முறையில் இருக்க முயற்சி செய்துள்ளான். ஆனால் பெண்ணோ திருமணம் வரை முடியாது என மறுத்துள்ளார். இதனால் கடுப்பான இளைஞன் பெண்ணின் வாயை கட்டியதுடன் கொடூரமான முறையில் கற்பழித்துள்ளான்.
பின் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். வீட்டிற்குள் தீயை கண்ட அயலவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்து பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் 90% தீக் காயம் இருப்பதால் காப்பாற்றுவது கடினம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் காதலனை பொலீஸார் தனி படை அமைத்து தேடிவருகின்றனர்..!