உடனடியாக இந்த முஸ்லீம்களை தடை செய்யுங்கள் ” அனைத்தையும் போட்டுடைத்த முஸ்லீம் அமைச்சர்.!
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை கூறிவரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் கொடூர தாக்குதல் பற்றிய சில முக்கிய விடயங்களை கூறியுள்ளார். கிறிஸ்தவ சகோதரர்களின் புனித நாளை கரி நாள் ஆக்கிய சம்பவம் நம் நாட்டை மட்டும் இன்றி பல நாடுகளையும் அதிர வைத்துள்ளது. எதுவும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
இவ்வாறான இன செயல் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு வன்மான கண்டனத்தை ” ஜம் இய்யத்துல் உலமா சபை” தெரிவிக்கிறது. சுமார் 20 இலட்சம் முஸ்லீம்கள் ஜம் இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் நல் வழியில் நடக்கின்றனர். அவர்கள் மக்களின் உயிரை பறிக்கும் கொடூர செயலில் இறங்க மாட்டார்கள்.
அதனால் தான் நாம் கொடூரனான “தெளஹீத் ஜமாத்” சஹ்ரான் பற்றியும் அவனது புகைப்படங்கள் விபரங்கள் போன்றவற்றையும் சில வருடங்களுக்கு முன்பு அரசுக்கு கொடுத்தோம். இவற்றை பாதுகாப்பு தரப்பினர் இடம் அன்று நாம் கொடுத்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது எமது முஸ்லீம் சமூகத்திற்கு வேதனை அளிக்கிறது.
அரசு தாக்குதல் நடத்த காரணமான அமைப்பை பயங்கர வாத அமைப்பு என தடை செய்ய வேண்டும். ஜம் இய்யத்துல் உலமா அனைவருடன் சகோதரத்துடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு வழி காட்டுகிறது. அதில் இருந்து மீறிய குறித்த அமைப்பை முஸ்லீமாக இருந்தாலும் பாதுகாப்பு படையினர் இடம் விபரம் கொடுத்தது குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும் என்பதற்காக தான் என தொடர்ந்தும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கூறியுள்ளார்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”