இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்ற தீவிர வாதியின் தமிழிலான பேஸ்புக் பதிவு..!
இலங்கை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் சிலர் கைது செய்யப் பட்டனர். இதில் சஹ்ரானுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முக்கிய உறுப்பினரான கேரளாவில் கைதான ரியாஸ் அபூபக்கர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியதாக புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. ரியாஸ் தற்போது 30 நாட்கள் காவலில் வைக்கப் பட்டிருக்கும் நிலையில் அவரது பேஸ்புக்கில் சில பதிவுகள் அதிர வைத்துள்ளது.
அதில் ஐ எஸ் ஐ எஸ் உரிமைக்கான குரல் எனவும். இஸ்லாமியரை அழிப்பதால் இஸ்லாம் அழிந்துவிடாது. இஸ்லாதிற்கு எதிராக இருப்பவர்களை அழித்து இஸ்லாம் வாழும் .போன்ற பதிவுகளும் மத வாதத்தை தூண்டும் விதமாக பல பதிவுகளும் இருந்துள்ளது. அத்துடன் தமிழிலும் பல பதிவுகளை ரியாஸ் இட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளின் பதிவுகளும்
அவரது பேஸ்புக் பக்கத்தில் அதிகம் பகிர்ந்துள்ளதாக கூறப் படுகிறது. அத்துடன் சஹ்ரானின் கட்டளையை பின் பற்றியே இவர் இந்த செயல்களை செய்து வந்ததாக ரியாஸ் குறியுள்ளதுடன் தாங்கள் தீவிர வாதிகள் அல்ல போராளிகள் என கூறியதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!