சஹ்ரான் மற்றும் தாக்குதலை வழி நடத்திய தீவிர வாத தலைவர் இவர் தானா? வெளிவரும் உண்மைகள்..!
இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக “தெளஹீத் ஜமாத்” தை சேர்ந்த சஹ்ரான் இனங் காணப்பட்டார். இதனை தொடர்ந்து தெளஹீத் ஜமாத் இலங்கையில் தடை செய்யப் பட்டது. இச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக்ச் தீவிர விசாரணையையும் தேடுதலையும் ஆரம்பித்த பொலீஸார் சில திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளனர்.
தாக்குதலுக்கு சஹ்ரான் மற்றும் அனைவருக்கும் பின்னால் இருந்து செய்யத் தூண்டியவர் மொஹமட் இமாம் பாகிர் என்ற நபர். இவரை உடனடியாக கைது செய்த பொலீஸார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது இமாம் பாகிர் சிரியாவிற்கு சென்று அங்கு ஐ எஸ் பயங்கர வாதிகளுடன் தங்கி பயிற்சி பெற்றுள்ளார், பல வருட பயிற்சியின் பின் இலங்கை வந்த இவர் இலங்கையில் IS தீவிரவாதத்தை பரப்ப தொடங்கியுள்ளார்.
இவருடன் ஒன்றாக சென்ற நிலான் என்பவர் சிரியாவில் வைத்து நடந்த மோதலில் உயிர் இழந்துள்ளதால் இவரை இலங்கைக்கு ஐ எஸ் அனுப்பியுள்ளது. இங்கு வந்த பின் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் குறித்த நபர். தற்கொலை தாக்குதலுக்கு காரணமான 16 ஐ எஸ் உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் பலர் துருக்கி சென்று பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓய்வு பெற்ற லெப்டினட் கேர்ணல் சுசந்த செனவிரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். அதில் மதவாதத்தை மட்டும் வைத்து தாக்குதல் நடத்தும் யாரையும் நடமாட விடுதல் ஆபத்தாகும். நிச்சயமாக இது தோற்கடிக்கப் பட வேண்டிய கட்டாயமாகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.!