ரிஷாட் பதியுத்தீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோருக்கு குவியும் எதிர்புகள்..! பறிபோகுமா பதவி..!?
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், அசாத் சாலி ஆகியோரை பதவி விளக்குமாறு கூறி நேற்றைய தினம் அத்துரலிய ரத்ன தேரர் நேற்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.
நேற்று காலை 10 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இந்த உண்ணாவிரத போராட்டத்தை குறித்த தேரர் ஆரம்பித்தார். தனி ஒருவராக ஆரம்பித்த இந்த போராட்டத்திற்கு தற்போது ஆதரவு குவிந்து வருகிறது.
ராகம பிரதேச கத்தோலிக்க சபை அருட்தந்தை மென்ப்ரூட் அந்தோனி என்பவரும் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் மட்டக்களப்பில் வியாழேந்திரன் mp இன்றைய தினம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு அளிப்பதாகவும் ரிஷாட் பதியுத்தீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் மீதான வழக்குகள் சரியான முறையில் விசாரணை செய்யப் பட வேண்டும் எனவும் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக எஸ் வியாழேந்திரன் Mp குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டங்களால் அரசு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய சூழ் நிலையில் தற்போது உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம்..!