எதிர்க்கட்சித் தலைவரானார் சஜித்!
இலங்கை அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு, சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பித்தது.
இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸசை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார்.
அதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக கயந்த கருணாதிலக தெரிவாகியுள்ளார்.