இந்தியாவின் சட்டத்தால் காமவெறிபிடித்து அழையும் குடும்ப பெண்கள்..! கண்ணீரில் தவிக்கும் குழந்தைகள்..!! இந்த சட்டம் வேண்டுமா.?!
திருச்சியை சேர்ந்தவர் கனகராஜ், ஏழை குடும்பத்தில் பிறந்த கனகராஜ் +12 மட்டுமே படித்திருந்தார். குடும்ப வறுமையின் காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். ஊருக்குள் சின்ன ஹோட்டல் வந்து அதன் மூலம் ஓரளவு வருமானம் வரவும் அந்த கடையை அம்மா அப்பாவை பார்க்க சொல்லி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கொடுத்துவிட்டு
வேறு ஹோட்டல் ஒன்றை வாங்கி நடத்தினார். அதே நேரம் பெற்றோர் சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தன் மனைவி மீது உயிரையே வைத்திருந்த கனகராஜ் சரண்யா ஆசை பட்டது போல் வாழ வைத்தார். இரண்டு குழந்தைகள் கிடைத்த பின் விட்ட தனது படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கனகராஜ் இடம் சரண்யா கூறிய போது
மனைவியின் ஆசையை நிறைவேற்ற துறையூர் காலேஜில் மனைவியை சேர்த்துவிட்டார் கனகராஜ். இந்த நிலையில் கனகராஜ்க்கு புது நம்பர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் உன் மனைவி வந்ததும் அவள் போனை எடுத்து பார் என கூறியுள்ளார்கள். காலேஜ் போன மனைவி வந்ததும் மொபைலை எடுத்து பார்த்த கனகராஜ் அதிர்ந்து போய் உள்ளார்.
அதில் இளைஞர் ஒருவருக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கனகராஜ் சரண்யாவை அடித்துள்ளார் . அப்போது சரண்யா மன்னித்துவிடுங்க..இவன் பேர் செல்வம். நான் இவனை காதலித்தேன். சாதியை காரணம் காட்டி எங்களை பிரித்திட்டாங்க. இரண்டு பேரும் வேற வேற திருமணம் செய்தாச்சி இனி தப்பு செய்ய மாட்டேன் என அழுதுள்ளார்.
சரண்யா சொல்வது உண்மை என நம்பிய கனகராஜ் இனி இப்படி செய்யாதே என கூறியுள்ளார். ஆனால் சரண்யாவோ….கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு இரவு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.அனைவரும் மயங்கியதும் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வத்துடன் ஓடியுள்ளார்.
காலையில் மனைவி வீட்டில் இல்லாததால் தேடி பார்த்துவிட்டு பொலீசில் புகார் கொடுத்துள்ளார் கனகராஜ். அதற்கிடையில் செல்வம் கால் செய்து உன் மனைவி பிள்ளை என்னோட இருக்காங்க வந்து கூட்டிட்டு போ என கூற உறவினர்களுடன் அங்கு சென்று செல்வத்தை கனகராஜ் தாக்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸாரிடம் மனைவி மற்றும் செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்யும் படி கனகராஜ் கூறியதற்கு பொலீஸார் முடியாது…மேஜர் என்றால் இருவருக்கும் பிடித்துப் போனால் யார் மனைவியுடனும் யார் வேண்டுமானாலும் வாழலாம் என்பது இந்தியாவின் சட்டம். உங்கள் மனைவி வந்தா கூட்டிப் போங்க என கூறியுள்ளனர்.
அதற்கு சரண்யாவோ எனக்கு செல்வம் தான் வேணும் என கூற செல்வமும் சரண்யா தான் வேணும் என கூறியுள்ளார். அத்துடன் கனகராஜின் பிள்ளை வேண்டாம் என குழந்தையும் திருப்பி கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு குழந்தையுடன் வந்த செல்வத்தின் மனைவி கதறி அழுதுள்ளார். சட்டம் தன் கடமையை செய்ய காமம் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டம் எத்தனை கேவலமானது..!