பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு!
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு விடுவிக்கப்பட்டது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், எந்த நடவடிக்கை எடுக்காமை குறித்து இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டது. ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தும் அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ, ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்ட போதும் அவர் அதனை மறுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளமையானது கொழும்பு அரசியல் மத்தியில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.