யார் இந்த தீவிரவாதி சஹ்ரான்.? அவரது சகோதரி சொல்லும் திடுக்கிட வைக்கும் உண்மைகள்.!
இலங்கை தேசிய தெளஹீத் ஜமாதின் தலைவரும் ஐ எஸ் அமைப்புடன் இணைந்து 21ம் திகதி தற்கொலை நடத்த முக்கிய காரணமானவனாக கருதப் படும் சஹ்ரான் ஹசீம் பற்றி அவரது சகோதரியான மொஹமட் ஹசீம் மதானியா அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு பேட்டி ஒன்றினை அழித்துள்ளார்கள். அதில் எனது சகோதரன் சிறு வயதில் இருந்தே முரட்டு தனமாக நடந்துகொள்வான் ஆனால் 17 வயதாகும் போது மதத்தின் மீது அதிக பற்றுள்ளவனாக மாறினான்.
ஆரம்பத்தில் எல்லோருக்கும் அது பிடித்தாலும் காலபோக்கில் வெறுப்பானது. அவனிடம் பேசி யாராலும் வெற்றி பெற முடியாது அவனே சரி என வாதிடுவான். தெளஹீத் ஜமாத் பள்ளி ஆரம்பித்ததும் முற்றிலும் மாறிவிட்ட சஹ்ரான் அல்லாஹ் இந்த பூமியையும் அனைத்தையும் படைத்தது முஸ்லீம்களுக்காக மட்டுமே என கூற ஆரம்பித்தான், இதனால் என் கணவருக்கும் என் குடும்பத்துக்கும் விரிசல் ஏற்பட்டது அதனால் நான் கணவருடன் வந்துவிட்டேன்.
அடிக்கடி வீட்டிற்கு சென்று தாய் தந்தை சகோதர சகோதரிளை பார்த்துவிட்டு வருவேன். கடந்த 18ம் திகதி வீட்டிற்கு சென்ற போது எனது அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் காணாமல் போய் இருந்தார்கள்.
அவர்களுக்கு எடுத்துச் சென்ற உணவை திருப்பி கொண்டு வந்துவிட்டு அவர்கள் எங்கு சரி சுற்றுலா சென்றிருக்கலாம் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் எல்லாம் புரிகிறது இவை அனைத்து சஹ்ரான் ஹசீமின் செயல் என. நிச்சயம் அல்லாஹ் எப்போதும் சஹ்ரானை மன்னிக்க மாட்டார் என கண்ணீர் சிந்தியுள்ளார்..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”