ஸ்ரீலங்காவில் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் – அவசர சிகிச்சை பிரிவில் 5பேர் அனுமதி..!!
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில், ஸ்ரீலங்காவில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று இரவு 9 மணிக்குள் புதிதாக நான்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இது வரையில் 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி சென்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்ற இரண்டு நோயாளிகள் தொடர்பில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.