ஸ்ரீலங்காவில் சிகரட் விற்பனையை தடைசெய்யுமாறு மருத்துவ அமைப்புகள் கோரிக்கை..!!
ஸ்ரீலங்காவில் சிகரட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக சுகாதார மேம்படுத்தல் பிரிவின் பேச்சாளர் ஒருவர். இந்த தடை பல வாரங்களுக்கு முன்னரே கொண்டு வந்திருக்கப்படவேண்டும். எனினும் தற்போதும் அதற்கான அவசியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.