22 ஆண்டுகளில் ஆக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள தட்டம்மைத் தொற்று…!!!
சிங்கப்பூரில் 22 வருடங்களாக தட்டம்மைத் தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் திகதி நிலவரப்படி 149 சம்பவங்கள் பதிவானதாக அமைச்சின் ஆக அண்மை வாராந்தர அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முழுமைக்குமான எண்ணிக்கையைக் காட்டிலும் அது மூன்று மடங்குக்கு மேல் அதிகம்.
தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்திருப்பதால் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கும் படி கேட்டுக்கொண்டது. வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் சிங்கப்பூர் தட்டம்மையால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மருத்துவர்களும் இது தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் இது தொடர்பாக அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அல்லது தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கவனமாக இருக்கும்படி அமைச்சு கேட்டுக்கொண்டது.