சிங்கப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது..!!!
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
அங் மோ கியோ அவென்யு 5 இலுள்ள தொழிற்பேட்டையில் பொலிஸார் நேற்று நடத்திய சோதனை போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 47 வயதில் இருந்து 67 வயதுக்கு உட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர்களிடம் இருந்து பத்து கணினிகள், இரண்டு மடிக் கணினிகள், 2,000 வெள்ளி ரொக்கம், தொலைவிலிருந்து சூதாட உதவும் ஒரு கைத்தொலைபேசி போன்றன பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சூதாட்டம் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 வருடம் வரை சிறைத்தண்டனையும் 200,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்,
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.