எதிர்வரும் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர்…!!!
எதிர்வரும் 2020 ஐபிஎல் தொடர் மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்திலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார். அவரது முழங்கையில் முறிவு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் 24 வயதுடைய ஆர்ச்சர் இனி நடைபெறும் அனைத்து தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.
ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணியில் நடைபெற்றுள்ள ஆர்ச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பந்து வீச்சில் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மார்ச் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. காயம் காரணமாக இலங்கை சுற்றுப்பயணத்திலிருந்தும் ஆர்ச்சர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: Jofra Archer has been ruled out of England's tour to Sri Lanka, as well as this year's IPL, having been diagnosed with a stress fracture of his elbow. pic.twitter.com/lReL6WuS0w
— ICC (@ICC) February 6, 2020