ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து ஐவர் திடீர் நீக்கம்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுசில் பிரேமஜயந்த, W.D.J.செனவிரத்ன, லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன, அனுர பிரியதர்சன யாப்ப ஆகிய ஐவரும் நேற்றைய தினம் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம் பெற்றிருந்தது. அதன்போதே மேற்படி ஐவரையும் பதவி விலக்கும் தீர்மானம் வெளியிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.