இலங்கை அரசாங்கத்தில் இருந்த அத்தனை முஸ்லீம் அமைச்சர்களும் சற்று முன் பதவி விலகினர்..! அதிரும் இலங்கை அரசு..!
சற்று முன்னர் அலரி மாளிகையில் நடந்து முடிந்த விஷேட கூட்டத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம் அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.நல்லிணக்க அரசாங்கத்தில் இது வரை காலமும் அங்கம் வகித்த அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், எம் எச் ஏ.ஹலீம், கபீர் ஹாசீம்,ரிஷாட் பதியுத்தீன்,
மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அமீர் அலி, எச்.எம்.எம். ஹரீஸ். பைசல் காசீம், அலிசாஹீர் மெளலானா ஆகியோர் தங்கள் பதவிகளை துறப்பதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லீம்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் அமைச்சர்களான ரிஷாட் பதியுத்தீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக கூறி அண்மைகாலமாக நடந்து வந்த போராட்டங்களுக்கு முடிவாக ஏற்கனவே அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி விலகியுள்ள நிலையில் தற்போது அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதுடன்
குற்றம் சாட்டப் பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணை ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் முடிவு சொல்ல வேண்டும் என அரசாங்கம், மற்றும் பாதுகாப்பு படையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..!