இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
ஸ்ரீலங்காவில் இன்று மட்டும் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இதுவரையில் 1530 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 61 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்களில் 26 கடற்படை வீரர்களும், குவைட்டிலிருந்து வருகைதந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 18 பேரும், டுபாயிலிருந்து வருகைதந்து கிரகம தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 17 பேருமாக மொத்தம் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரையில் 10 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.