நாட்டின் காலநிலை மாற்றம்!
கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வரையில் வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலையில் கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையின் ஏனைய கடற் பரப்புகள் இடைக்கிடை கொந்தளிப்பாக காணப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடற்படையினர் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.