முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் சிறை வாசம் அனுபவிக்கும் 20 முன்னாள் போராளிகள்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரனின் பாதுகாப்பு காரணமாக 20 முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் போரினால் அங்கவீனமானோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சிங்கள ஊடகத்தில் வழங்கிய செய்தியில் அவர், முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக்கொள்ள தானே பிரயத்தனம் மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் வரை முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.