முல்லைத்தீவிற்கு சற்று முன்னர் படையெடுக்கும் சிங்களவர்கள்..!
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கட்டயமாக அமைத்த குருகந்த ரஜமஹா விகாரைக்கு கொழும்பு அனுராதபுரம் வெலிஓயா பகுதியில் இருந்து மூன்று பஸ்களிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் உள்ள குழுவினர் மூன்று பஸ்களில் கூட்டி வந்து சிங்கள மக்கள் இன்றைய நாளில் பொசன் வழிபாடுகளில் மேற்கொண்ட நிலையில் விகாரையில் சத்தியாக்கிரகம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்
எல்லா சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த பிக்குகள், இந்த இடத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய் கூறியதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே நிறைய வருடங்கள் இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஆலயப்பகுதியில் தமிழர் ,சிங்களவர் என இருவருக்கும் அமைதி பங்கமின்றி வழிபாடுகளை நடத்த முடியும். என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று சென்ற மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் கூட்டிவரப்பட்ட சம்பவம் இடம்பெறுகிறது .
விகாரை பெயர்ப்பலகை தகர்க்கப்பட்டமைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியமை.