யாழ் மறவன்புலோ பகுதியில் மின் காற்றாலை அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்…!!!!
யாழ்ப்பாணம் – தென்மராட்சி மறவன்புலோ பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதடியில் அமைந்துள்ள வட மாகண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மறவன்புலோ பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மறவன்புலோ மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.
கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநர் இன்று மக்களை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்று வரும் நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் உடனடியாக இந்த இடத்திற்கு வருகை தருமாறும், ஆர்ப்பாட்டக்காரர்களின் 5 பேரையும் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.