தண்டவாளத்தில் படுத்திருந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்…!!!
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று தண்டவாளத்தில் நித்திரை கொண்டிருந்த வேளை ரயிலில் சிக்குண்டுள்ளார்.
50 வயதுடைய நபரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த நபர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.